ஜப்பான் அரசு சீனா பயணிகளுக்கு கட்டுப்பாடு!

Filed under: உலகம் |

ஜப்பான் அரசு சீனாவிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகின் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா சோதனை செய்யப்படுவார்கள் என்றும் கொரோனா அறிகுறி அல்லது உறுதி செய்யப்பட்டால் விமான நிலையத்திலேயே அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என்றும் ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.