ஜெகன்மோகனின் பங்களா குறித்து நடிகை ரோஜாவின் விளக்கம்!

Filed under: அரசியல்,இந்தியா |

சமீபத்தில் மிகப்பெரிய ஹாட் ஆப் டாப்பிக்கானது முன்னாள் ஆந்திர முதலமைச்சரான ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா பற்றிய செய்திகள்தான்.

இது குறித்து நடிகை ரோஜா “500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அந்த பங்களா அரசுக்கு சொந்தமானது என்றும் ஜெகன்மோகனுக்கு சொந்தமானது என்று தவறான தகவல் பரவி வருகிறது. ருஷிகொண்டா என்பது ஒரு சுற்றுலா மையம் என்பதால் அங்கு சுற்றுலாத்துறை கட்டிடங்கள் கட்டுவது தவறா? வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடத்தில் ஒரு சொகுசு மாளிகை கட்டியது தவறா? மத்திய அரசின் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற்று கட்டப்பட்ட கட்டிடங்களை அரசு கட்டிடம் என்பது கூட அறியாமல் ஜெகன்மோகனுக்கு சொந்தமான கட்டிடம் என்று அவரது நற்பெயருக்கு தளங்கம் விளைவிப்பது சரியா? உலகில் உள்ள சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஐந்து நட்சத்திர வசதிகளுடன் கூடிய ஒரு கட்டிடத்தை பொய்யான தகவல் மூலம் வதந்திகளை பரப்புகிறார்கள்” என்று விளக்கமளித்துள்ளார்.