ஜெயக்குமார் அதிரடி.!

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 10-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கருணாநிதி குறித்து இடம்பெற்றுள்ள பாடத்தை நீக்குவோம் என தெரிவித்துள்ளார்.

சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம், “மே தினம் தொழிலாளர் வர்க்கத்தினரின் தியாகத்தால் உருவானது எனவும் தொழிலாளர்கள் நலனைக் காத்தவர் எம்ஜிஆர். திமுக அரசு தொழிலாளர்களின் மீது விரோத போக்கை கடைபிடித்துக் கொண்டு வருவதாகவும் திமுக ஆட்சியில் தொழிலாளர்கள் பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நடிகர் அஜீத்குமாருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நடிகர்களில் தைரியமாக செயல்படக்கூடியவர் அஜீத்குமார். கருணாநிதியின் பாராட்டு விழா மேடையிலேயே திமுகவிற்கு எதிராக பேசிய அஜீத் உண்மையிலேயே தைரியசாலி. அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதிமுக ஆட்சியில் 10ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்திலிருந்து கருணாநிதியின் வரலாறு நீக்கப்படும். மேலும், பள்ளி பாட புத்தகங்களில் வீரம், வரலாற்று சாதனை பற்றிய பாடங்களை மட்டுமே வைக்க வேண்டும்” எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.