டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு!

Filed under: அரசியல் |

டிடிவி தினகரன், “கனிமொழிக்கு பதவி கொடுத்ததற்கு பயம் ஒன்று தான் காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக பொதுக்குழுவில் சமீபத்தில் கூடியது. அதில் கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “கனிமொழி மீதான பயம் காரணத்தினால் அவருக்கு துணை பொது செயலாளர் பதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். அவருக்கு பதவி கொடுக்காவிட்டால் திமுக இரண்டாகி இருக்கும். தவறு செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனமாக இருக்கிறார்” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் “ஜெயலலிதா இப்போது அமைச்சராக இருந்தால் உடனடியாக தவறு செய்யும் அமைச்சர்களை நீக்கி இருப்பார்” என்று கூறியுள்ளார்.