டில்லியில் நடந்த சம்பவத்தில் பரபரப்பு தகவல்!

Filed under: இந்தியா |

புத்தாண்டு கொண்டாட்டத்தில் டில்லியில் இளம்பெண் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் அவர் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்யுள்ளது.

இந்த கோர சம்பவம் குறித்து காரில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேரும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளம்பெண் வாகனத்தின் பின்னால் இன்னொரு பெண் அமர்ந்து சென்றது தற்போது சிசிடிவி காட்சிகளின் போது தெரியவந்துள்ளது. ஆனால் ஒரு பெண் மட்டுமே பலியாகியுள்ள நிலையில் பின்னால் அமர்ந்து சென்ற இன்னொரு பெண் யார்? அவர் விபத்துக்கு முன்பே இறங்கி விட்டாரா? என்பது குறித்த கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து மேலும் சில சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது.