டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவு எப்போது?

Filed under: தமிழகம் |

இன்று மாலை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வை 18 லட்சம் பேர் எழுதினர்.

தேர்வு முடிந்து பல மாதங்கள் ஆன பின்னும் இன்னும் முடிவுகள் வரவில்லை. இது குறித்த ஹேஷ்டேக் திடீர் என கடந்த சில நாட்களுக்கு முன் டுவிட்டரில் வைரலானது. டிஎன்பிஎஸ்சி இது குறித்து சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது. தற்போது டிஎன்பிஎஸ்சி வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவலின்படி இன்று மாலை குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.