டி.என்.பி.எ.சி அறிவிப்பு..!

Filed under: தமிழகம் |

தேர்வாணையம் இன்று முதல் டி.என்.பி.எ.சி குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பம் செய்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய வேண்டிய நிலை இருந்தால் திருத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் குரூப்-4 தேர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மார்ச் 4 முதல் 6ம் தேதி வரை திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் 6244 காலி பணி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. ஜனவரி 30ம் தேதி விண்ணப்பம் தொடங்கி பிப்ரவரி 28ம் தேதி நிறைவேற்றந்தது. விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவார்கள் இன்று முதல் நாளை மறுநாள் வரை திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் புதிதாக யாரும் விண்ணப்பிக்க முடியாது என்றும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என்றும் தமிழ் தகுதி தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.