டீக்கடைக்காரரின் மகள் குரூப் 1 தேர்வில் வெற்றி!

Filed under: தமிழகம் |

டீக்கடைக்காரரின் மகள் முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆகிறார்.

டீக்கடைக்காரரின் மகள் பவானியா என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வடவாளம் ஊராட்சியைச் சேர்ந்தவர். சமீபத்தில் குரூப் 1 தேர்வு எழுதினார். இவர் எந்த ஒரு பயிற்சி மையத்திற்கும் செல்லாமலேயே தானாகவே முயற்சி செய்து நூலகங்களில் உள்ள புத்தகங்களை எடுத்து படித்ததாக கூறியுள்ளார். இவர் முதல் முயற்சியிலேயே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் டிஎஸ்பி பணிக்கு தேர்வாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் முயற்சியிலேயே குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ள பவானியாவை அவரது குடும்பத்தினர் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.