தஞ்சையில் பாலம் இடிந்ததால் பரபரப்பு!

Filed under: தமிழகம் |

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட பாலம் தஞ்சையில் திடீரென இன்று இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் கட்டுமான பணிகள் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளின் தரம் குறைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் அவ்வப்போது குற்றம் சாட்டி வருகின்றன. இது குறித்த வீடியோக்களும் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. தஞ்சை மாநகராட்சி 27வது வார்டில் கட்டி முடிக்கப்பட்ட பத்து நாட்களில் வடிகால் வாய்க்கால் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. 3 யூனிட் மணல் ஏற்றி சென்ற லாரியின் பாரம் தாங்காமல் இந்த பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து இந்த பாலத்தை கட்டிய காண்டிராக்டர் மற்றும் மாநகராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.