தனது குழந்தையை கொன்ற பிரபலம் கைது!

Filed under: தமிழகம் |

தான் பெற்ற 4 வயது குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

Mindfull Al Lab நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக இருப்பவர் சுச்சனா. இவர் தனது கணவரை விவகாரத்து செய்த பின் தன் மகனுடன் வாழ்ந்து வந்தார். விவாகரத்திற்கு பின் தன் மகனுடன் கணவர் சந்தித்து வருவதை இவரால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. தந்தை- மகன் சந்திப்பை தடுக்க வேண்டி, தனது 4 வயது மகனை கொடூரமாக கொன்று சடலத்தை பையில் வைத்து கோவாயில் இருந்து பெங்களூரு எடுத்துச் சென்றுள்ளார் தாய் சுச்சனா. இதையடுத்து, கோவாவில் சுச்சனா தங்கியிருந்த அறையில் இருந்த ரத்தக் கறையை கண்ட விடுதி பணியாளர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.