தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியா?

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜகவின் கேபி ராமலிங்கம் தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும் என பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக மற்றும் அதிமுகவின் தலைவர்கள் ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் என கூறி வருகின்றனர். சேலம் அருகே ஓமலூரில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும் என்று பேசி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். அவரது பேச்சுக்கு திமுகவினர் என்ன பதிலடி கொடுக்கப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.