“தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை’’; பிரதமர் மோடி!

Filed under: அரசியல்,தமிழகம் |

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை ஆதரித்த அந்தந்த அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று பிரதமர் மோடி கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக தன்னுடைய சுய லாபத்திற்காக தமிழகத்திற்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை. எதாவது பொய் சொல்லி அரசு அதிகாரத்தில் இருப்பதே திமுக, காங்கிரஸின் நோக்கமாகவுள்ளது. எங்களுடையெ அரசு 25 கோடி ஏழை மக்களை வறுகைக்கோட்டையில் இருந்து மீட்டுள்ளது. திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை” என்று விமர்சித்துள்ளார்.