தமிழக அமைச்சரவை மாற்றமா? பிடிஆர் தூக்கப்படுவரா?

Filed under: அரசியல்,தமிழகம் |

நாளை மறுநாள் தமிழக அமைச்சவை மாற்றம் செய்யப்படும் நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தூக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சமீபத்தில் ஒரு ஆடியோ இணையதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் 30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக கூறப்பட்டிருந்தது. நாளை மறுநாள் தமிழக அரசு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்படும் அல்லது அவர் அமைச்சரவையில் இருந்து தூக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை பிடிஆர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டால் தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து இதுவரை இரண்டு முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் செய்யப்படும் அமைச்சரவை மாற்றத்தில் என்னென்ன மாற்றம் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.