தமிழக அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு!

Filed under: தமிழகம் |

அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சார மசோதாவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

மின்சார சட்டத் திருத்த மசோதா இன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்சார சட்டத் திருத்த மசோதா ஏழை மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மின்சார சட்டத் திருத்த மசோதா மாநில மின் வாரியங்களின் உரிமையை பறிக்கிறது. அரசின் கொள்கைகளை தனியாருக்கு தாரைவார்க்க மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.