தமிழர்களுக்கு நாமல் ராஜபக்சே வேண்டுகோள்!

Filed under: அரசியல்,இந்தியா,உலகம் |

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நாமல் ராஜபக்சே இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமானவும் உள்ளார். அவர் மட்டக்களப்பில் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடிய போது, “அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் கொள்ளை அடிக்கப்படுகிறது, தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். இலங்கையில் வரும் அக்டோபர் 17ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று அவர் கூறினார். தேர்தல் தேதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் தேர்தலை நிறுத்த சில சக்திகள் சதி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.