தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வு!

Filed under: தமிழகம் |

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் அரிசி விலை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்றுமதி அதிகரிப்பு ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் அரிசி விலை உயர்ந்துள்ளதாக அரிசி வியாபாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மேலும் அரிசி விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல வட இந்தியர்கள் அரிசியை பயன்படுத்துவதால் அரிசி விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இன்னும் ஐந்து ரூபாய் வரை விலை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.