என்ஐஏ அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் சோதனை செய்தனர். நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகளின் வீட்டில் சோதனை செய்தனர்.

நாம் தமிழர் நிர்வாகிகள் சிலர் என்ஐஏ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கமளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. தற்போது தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கோவை கார் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படுபவர்களின் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனை என்பது கோவை, சென்னை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related posts:
நடிகர் விஜய் எங்களுக்கு அண்ணன்: தொகுதி பங்கீடு குறித்து முதல்வரே முடிவெடுப்பார். அமைச்சர் அன்பில் மக...
தேனி காட்ரோடு அருகே விபத்து. விரைந்து உதவிய தேனி எம்.பி ரவுந்திரநாத்.
களத்தில் குதித்தார் திருப்பத்தூர் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி!
கொரோனா வைரஸை தடுக்க paytm மூலம் பேருந்து பயணச்சீட்டு - புதிய முயற்சி!



