தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கண்டனம்!

Filed under: சினிமா |

சமூக வலைதளங்களில், இயக்குனர் பாலா தன்னை படப்பிடிப்பின் போது அடித்து விட்டதாக நடிகை ஒருவர் பேட்டி அளித்ததாக செய்திகள் வேகமாக பரவி வருகிறது. அதற்கு அந்த நடிகை தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

மமீதா பைஜூ ‘வணங்கான்’ படத்தில் நடித்தவர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இயக்குனர் பாலா தன்னை படப்பிடிப்பின்போது அடித்ததாக கூறியதாக செய்திகள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. தற்போது நடிகை மமீதா பைஜூ அளித்த விளக்கத்தில், “நான் கூறிய ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எடிட் செய்து தவறாக பரப்பி விட்டார்கள். நான் என்னென்ன சொன்னேன் என்பதை மொத்தமாக அந்த வீடியோவை பார்த்தால் தான் அனைவருக்கும் புரியும். பாலா மட்டும் இன்றி “வணங்கான்” திரைப்படத்தில் உள்ள உதவி இயக்குனர்கள் மற்றும் டீம் முழுவதுமே என்னை மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பார்த்துக் கொண்டார்கள். அவர் என்னை அடித்தார் என்பது தவறான புரிதல். இந்த விளக்கத்தை அடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாலா குறித்து கூறும்போது, “உண்மையைத் தெரிந்து கொள்ளும் முன் பொய்யானதை பிடித்துக் கொள்கிறோம். அல்லது ஒருவரைப் பற்றிய தவறான பிம்பத்தைக் கட்டமைக்கிறோம். இயக்குநர் பாலா அண்ணன் படைப்புக்காக போராடக்கூடியவர். அதற்காக மெனக்கிடக் கூடியவர். பல கதாபாத்திரங்களை வேறொரு உலகத்தில் நின்று சிந்தித்து ஆக்கியவர். சம்பந்தப்பட்டவர்களின் உண்மையை அறியாமலே நாம் படபடத்துவிடுகிறோம்” என்று கூறியுள்ளார்.