தலையை துண்டித்து மனைவியை கொன்ற பூ வியாபாரி!

Filed under: தமிழகம் |

பூ வியாபாரம் செய்தவர் மனைவியின் தலையை துண்டித்து கொன்ற சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் கொங்கு மெயின்ரோடு டி.எம்.எஸ். நகர் 4வது வீதியில் வசிப்பவர் மணிகண்டனின் (36) மனைவி பவித்ரா (23). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறார். பவித்ரா மணிகண்டனுக்கு 2வது மனைவி ஆவார். இதேபோல் பவித்ராவுக்கும் ஏற்கனவே திருமணமாகி 2 வதாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் குடும்பத்தில் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதில், பவித்ரா நேற்று அவரது தாயாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அரிவாளால் பவித்ராவின் தலையை வெட்டிக் கொலை செய்ததாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து தகவலறிந்து திருப்பூர் வடக்கு போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.