திடீரென பல்டியடித்த ஜெயக்குமார்!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜகவுடன் அதிமுக கட்சியின் கூட்டணி தொடர்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருப்பது கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவின் முன்னணி தலைவர்கள் ஒரு பக்கம் பாஜக மற்றும் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம், “பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது, கூட்டணி குறித்து அதிமுக எந்த சர்ச்சையுகருத்தும் கூறவில்லை, ஆனால் அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா குறித்து அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. ஜெயலலிதாவுக்கு நிகரான தலைவர் இனி தமிழ்நாட்டில் பிறக்கப் போவது கிடையாது” என்று அவர் தெரிவித்தார்.