திமுக ஆட்சிக்கு வரும்போது இந்தி எதிர்ப்பை பேசும்!

Filed under: அரசியல் |

பாஜக தலைவர் அண்ணாமலை “திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்தி எதிர்ப்பை பற்றி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இன்று திமுக இளைஞரணி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுக மீது எதிர்ப்பு வந்தால் அக்கட்சியினர் இந்தி எதிர்ப்பை பற்றி பேசுவார்கள். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ் கட்டாய மொழியாக இதுவரை மாற்றப்படவில்லை. திமுக நிர்வாகிகள் நடத்தும் பள்ளியில் கூட தமிழ் கட்டாயம் இல்லை. மத்திய அரசு எந்த இடத்திலும் இந்தி மொழி கட்டாயம் என பேசவில்லை. புதிய கல்விக் கொள்கையில் மொழிக் கொள்கையை கடைபிடிக்கும்” என்று கூறியுள்ளார்.