திருநெல்வேலியில் அதிர்ச்சிகரமான சம்பவம்!

Filed under: தமிழகம் |

திருநெல்வேலியில் தன் மகளையே கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து அருகே பாலாமடை பகுதியில் நர்சிங் படிக்கும் 19 வயது அருணா என்ற இளம்பெண்ணை அவரது தாயாரே கொலை செய்துள்ளார். மகளை கொலை செய்த பின்னர் தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். நர்சிங் படித்து வந்த அருணா, அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை காதல் செய்ததாகவும் திருமணத்திற்கு அவரது தாய் ஏற்பாடு செய்த நேரத்தில் காதல் விவகாரம் தாய்க்கு தெரியவந்ததை அடுத்து அவர் ஆத்திரத்தில் மகளை கொலை செய்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மகளை கொன்ற தாயிடம் விசாரணை செய்து வருகின்றனர். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு கைது செய்யப்படுவார்.