திருமலையில் மீண்டும் சிறுத்தை!

Filed under: இந்தியா |

சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் காட்டுப் பகுதியில் மீண்டும் இருப்பதால் வனத்துறையினர் திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்தனர். மீண்டும் திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கண்காணிப்பு கேமராவில் இருந்து பதிவான காட்சிகளை வெளியிட்டு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு கையில் வழங்கப்படும் கைத்தடியை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.