திருமாவளவனுக்கு நெட்டிசன்களின் கேள்வி?

திருமாவளவனுக்கு பாஜக வேட்பாளராக பழங்குடியின பெண் திரௌபதி முர்முவை நிறுத்தியுள்ளதால் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருமாவளவன் பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பழங்குடியின பெண் ஒருவர் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இப்போது திருமாவளவனின் ரியாக்ஷன் என்ன என்பதே நெட்டிசன்களீன் கேள்வி.

முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஜக அதிரடியாக பழங்குடியின பெண் திரௌபதி முர்மு என்பவரை குடியரசு தலைவர் போட்டியாளராக நிறுத்தி உள்ளது. திருமாவளவன் அவருக்கு ஆதரவு கொடுப்பாரா? அல்லது அரசியல் செய்வாரா? என்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.