திருவண்ணாமலை மலை மீது பறந்த ட்ரோன்!

Filed under: தமிழகம் |

திடீரென மர்மான முறையில் திருவண்ணாமலை தீப மலையின் மீது பறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது ரஷ்ய இளைஞர் ஒருவரை விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அனுமதியின்றி திருவண்ணாமலை மீது ட்ரோன் கேமராவை பறக்கவிட்டுள்ளார். இவரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அனுமதியின்றி தீபமலையின் மீது ட்ரோன் பறக்கவிட்ட அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் சில தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய இளைஞருக்கு திருவண்ணாமலையின் புனிதம் குறித்து தெரியாது என்றும் அவர் தற்செயலாக இது ஒரு சாதாரண மலை என்று நினைத்து ட்ரோனை வானில் பறக்க விட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய இளைஞரிடம் மேலும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.