திரைப்பட இயக்குனர் திடீர் மாற்றம்?

Filed under: சினிமா |

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவான “டிமான்டி காலனி” கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

தற்போது “டிமான்ட்டி காலனி 2” படத்தை அஜய் ஞானமுத்து உதவியாளர் ஒருவர் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இயக்குனர் மாற்றப்பட்டுள்ளது. “டிமான்ட்டி காலனி” திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவே இரண்டாம் பாகத்தையும் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்க இருப்பதாகவும் சாம் சிஎஸ் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாகம் போல் இரண்டாம் பாகம் வெற்றி பெறுமா-? என்பதை காத்திருந்து பார்ப்போம்.