தீபாவளி பரிசு வங்கியில் செலுத்த முதலமைச்சர் முடிவு!

Filed under: புதுச்சேரி |

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதிலாக பணத்தை வங்கியில் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்காக அரிசி மற்றும் சக்கரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வாண்டு அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதில் பணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு புதுச்சேரியில் 10 கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ சர்க்கரை வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. இவ்வாண்டு அரிசி மற்றும் சர்க்கரை கொடுப்பதற்கு பதிலாக பொதுமக்களின் வங்கி கணக்கில் அதற்கு ஈடான பணம் செலுத்தப்படுமென புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்பணம் கொடுக்கப்படுவதாகவும் அந்த பணத்தை வைத்து மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பரிசாக அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை கொடுத்து வரும் நிலையில் இதே போன்று பணமாக கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கை தற்போது எழுப்பப்பட்டு வருகிறது.