துபாயிலிருந்து சூட்கேசில் வந்த தக்காளி!

Filed under: இந்தியா,உலகம் |

தக்காளியின் வலை வெகுமளவிற்கு உயர்ந்துள்ள காரணத்தினால் சில ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது. துபாயிலிருந்து இந்தியாவிற்கு வந்த இளம்பெண் ஒருவர் 10 கிலோ தக்காளியை கொண்டு வந்ததுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தக்காளி 200 ரூபாய் அளவில் வட இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இளம்பெண் ஒருவர் தனது அம்மா வீட்டிற்கு துபாயிலிருந்து இந்தியா வருவதற்கு முடிவு செய்தார். அப்போது அவர்கள் தனது அம்மாவிடம் போன் செய்து உங்களுக்கு என்ன வாங்கி வர வேண்டும் என்று கேட்டபோது அவர் 10 கிலோ தக்காளி வாங்கி வா என்று கூறியதாகவும் உடனே அவர் துபாயில் 10 கிலோ தக்காளி வாங்கிய தனது சூட்கேஸிற்குள் வைத்து கொண்டு வந்ததாகவும் அவரது கணவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு ஒரு சில மணி நேரத்தில் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர். துபாயிலிருந்து எல்லோரும் நகை தான் கொண்டு வருவார்கள். இந்த பெண் தக்காளி கொண்டு வந்திருக்கிறார் என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.