துப்பாக்கியுடன் பொதுமக்களை மிரட்டிய மாவோயிஸ்ட்!

Filed under: அரசியல்,இந்தியா |

மாவோயிஸ்ட் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் யாரும் வாக்களிக்க கூடாது என்று துப்பாக்கியுடன் வந்து பொதுமக்களை மிரட்டியிருப்பதாக கூறும் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி ஆனி ராஜா என்ற பெண்ணை வேட்பாளராக்கி உள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருக்கிறது. ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுவது இந்தியா கூட்டணியின் நம்பகத்தன்மையை சந்தேகப்படும் வகையில் உள்ளது. வயநாடு தொகுதியில் உள்ள மலை கிராமத்தில் திடீரென மாவோயிஸ்டுகள் நான்கு பேர் துப்பாக்கியுடன் வந்து பொதுமக்களை மிரட்டியதாகவும் யாரும் வாக்களிக்க கூடாது என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி நமது நன்மைக்காக எதுவும் செய்யவில்லை என்றும் எனவே தேர்தலில் யாரும் வாக்களிக்க கூடாது என்று மாவோயிஸ்டுகள் மிரட்டியதாக வெளியாகி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.