தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து சைலேந்திர பாபு!

Filed under: அரசியல்,தமிழகம் |

காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதையடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இதுகுறித்து கூறும் போது, “தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கின்றோம். 500 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 100 பேரை கொண்ட 5 குழுவினர் மீட்பு பணிக்கு தயாராக உள்ளனர். சென்னையில் இரண்டு குழுவும் நீலகிரி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் மூன்று குழுக்களும் தயார் நிலையில் உள்ளனர். கன மழை பெய்து பாதிப்பு ஏற்பட்டால் உடனே மீட்டுபடையினர் களத்தில் இறங்கி பணிகளில் ஈடுபடுவார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.