தெற்கு ஜப்பானில் நிலநடுக்கம்!

Filed under: உலகம் |

தெற்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து ஜப்பானின் தெற்கு தீவு பகுதியிலுள்ள கியூசு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 என்ற பதிவானதாகவும் இரண்டாவது ஆக நிகழ்ந்த நிலநடுக்கம் 7.1 என பதிவானதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கடலோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் தெற்கு தீவு பகுதியில் உள்ள கியூஷ் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.