நடிகர் அசோக் செல்வனின் பேட்டி!

Filed under: சினிமா |

சமீபத்தில் அசோக் செல்வன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியான திரைப்படம் “ப்ளூ ஸ்டார்” திரைப்படம் வெற்றியடைந்துள்ளது.

இப்படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் கொண்டாடினர். விழாவில் தன் மனைவி கீர்த்தி பாண்டியன் பற்றி அவர் மனம் திறந்துள்ளார் அசோக் செல்வன். ஷாந்தனு, பகவதி பெருமாள், குமரவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜெயகுமார் இயக்கிய இப்படத்தை பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது. இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது. “ப்ளூ ஸ்டார்” படம் வெற்றியை படக்குழுவினர் இன்று கொண்டாடினர். விழாவில் நடிகர் அசோக் செல்வன், “ப்ளூ ஸ்டார் படப்பிடிப்பின்போது நானும், கீர்த்தியும் காதலர்களாக இருந்தோம். அதனால் கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்தது. அப்போது திருமணம் பற்றி எனக்கு பயம் இருந்தது. நம்மால் முடியுமா என்று தோன்றியது. ஆனால், கீர்த்தி கீர்த்தி எனக்கானவள் என்ற உணர்வு வந்த பிறகு, அந்த பயம் போய்விட்டது. திருமணம் செய்துகொள்வதற்கான தைரியத்தை கொடுத்தது அவர்தான்” என்று பேசினார்.