நடிகர் பிரபாஸின் படக்குழுவினர் அதிர்ச்சி!

Filed under: சினிமா |

இன்று திரையரங்குகளில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “ஆதிபுருஷ்”. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு சுத்தமாக வரவேற்பில்லை என்பது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியை அடுத்து தமிழ் மொழியில் மட்டுமே உருவாகி உள்ளது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் மிகக்குறைந்த ஆடியன்ஸ் மட்டுமே இருப்பதாகவும் ஒரு சில திரையரங்குகளில் 10 முதல் 20 பார்வையாளர்கள் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் நாள் முதல் காட்சிக்கே இந்த நிலை என்றால் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்து கொண்டிருப்பதால் இனி அடுத்தடுத்த நாள்களில் சுத்தமாக ஆடியன்ஸ்கள் வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ராமாயண கதையில் தமிழர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தாலும் இந்த படம் எடுக்கப்பட்ட விதம் குறித்து பெரும் சர்ச்சை கருத்துக்கள் எழுந்து வருகிறது.