நடிகர் ராதாரவி மீண்டும் வெற்றி!

Filed under: சினிமா |

நடிகர் ராதாரவி தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேற்று தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு மீண்டும் ராதாரவி போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராஜேந்திரன், சற்குணராஜ் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டது. மொத்தம் பதிவான 1021 வாக்குகளில் ராதாரவி 662 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரனுக்கு 349 வாக்குகளும் சற்குணராஜ் என்பவருக்கு 36 வாக்குகளும் கிடைத்தது. இதையடுத்து ராதாரவி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்து ஆரவாரம் செய்தனர். மேலும் டப்பிங் யூனியனில் 23 நிர்வாகிகளும் இந்த தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். நடிகர் ராதாரவி மீது டப்பிங் யூனியனில் உள்ள ஒரு சிலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டாலும் அவர் அபார வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் கலைஞர்கள் யூனியனின் தலைவராகி உள்ளார் நடிகர் ராதாரவி.