நடிகர் வடிவேலு பாடலை பாராட்டிய சூரி!

Filed under: சினிமா |

“மாமன்னன்” திரைப்படத்தின் முதல் சிங்கில் பாடல் ஏ.ஆ.ரஹ்மான் இசையில், நடிகர் வடிவேலு பாடியுள்ளார். இப்பாடலை நடிகர் சூரி பாராட்டியுள்ளார்.

“கர்ணன்” படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முழுதும் நிறைவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “மாமன்னன்” பட முதல் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த போஸ்டரில் வடிவேலுவின் லுக் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. நேற்று “மாமன்னன்” படத்தின் முதல் சிங்கில் “ராசாகண்ன்னு” என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேலு பாடியுள்ள இப்பாடல் இணையதளத்தில் வைரலானது. பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ள இப்பாடலை சினிமா கலைஞர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். பாடல் பற்றி நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில், “தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல் #RaasaKannu – #MAAMANNAN படக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். இப்பாடல் இதுவரை 33 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்துள்ளது.