நடிகைக்கு இத்தனைக் கோடி சம்பளமா?

Filed under: சினிமா |

“சீதாராமம்” திரைப்படத்தில் நடித்த மிருனாள் தாக்கூரின் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது.

நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் உருவாக உள்ளது. அறிமுக இயக்குநர் ரீகாந்த ஒதெலா இப்படத்தை இயக்குகிறார். ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நானி மற்றும் மிருனாள் தாக்கூர் (சீதாராமம் புகழ்) இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு தற்காலிகமாக “நானி 30” என்ற படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை ஷௌரிவ் இயக்குகிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்காக மிருனாள் தாக்கூருக்கு சம்பளமாக சுமார் 6 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் உச்சத்தை தொட்டுள்ளார்.