நடிகை தேவயானி கட்டிய பண்ணை வீடு!

Filed under: சினிமா |

90ஸ் காலத்தில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் பவ்யமான ஹோம்லி நடிகையாக நடித்து பெயரெடுத்தவர் நடிகை தேவயானி. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது 48 வயதாகும் தேவயானி சீரியல், நிகழ்ச்சி போன்ற வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார்.

இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தேவயானி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிராமத்தில் சுமார் 5.30 ஏக்கர் நிலம் வாங்கி அழகான பண்ணை வீடு ஒன்றை கட்டி விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார். மரம், செடி, கொடிகளுக்கு நடுவில் அவரது பண்ணை வீடு இயற்கைகள் சூழ்ந்து அமைந்துள்ளது. அவரின் பண்ணை வீடு புகைப்படம் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் வியந்து ரசித்துள்ளனர்.