நடுவானத்தில் விமான தீ விபத்து!

Filed under: உலகம் |

டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்தபோது நடுவானில் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்தில் இருந்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று விமானத்தின் எஞ்சின் தீப்பற்றியது. இதைக் கண்ட விமானிகள் உடனே அவசரமாக பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர். அங்கிருந்த பாதுகாப்புக் குழுவினர் பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். விமானம் புறப்படும்போதே, விமானத்தில் சிறிது சத்தம் எழுந்துள்ளது, அது இயல்பான சத்தம் என்று நினைத்து விமானிகள் விமானத்தை இயக்கியுள்ளனர். விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குச் என்று கொண்டிருந்தபோது நடுவானில் தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்திலிருந்து அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று விமானத்தின் எஞ்சின் தீப்பற்றியது. இதைக் கண்ட விமானிகள் உடனே அவசரமாக பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கினர். அங்கிருந்த பாதுகாப்புக் குழுவினர் பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். விமானம் புறப்படும்போதே, விமானத்தில் சிறிது சத்தம் எழுந்துள்ளது, அது இயல்பான சத்தம் என்று நினைத்து விமானிகள் விமானத்தை இயக்கியுள்ளனர். இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.