நயினார் நாகேந்திரன் கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தனித்து போட்டி என்பது அண்ணாமலையின் சொந்த கருத்து என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை, “அதிமுகவுடன் கூட்டணி இல்லை, அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவு எடுக்கப்பட்டால் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாக கட்சியில் பணியாற்றுவேன்” என்று தெரிவித்திருந்தார். பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், “தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டது இல்லை. தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கவும் முடியாது” என்று கூறினார். பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என அண்ணாமலை கூறிய நிலையில் தனித்து போட்டியில்லை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.