நாடாளுமன்ற கூட்டத்தில் சதி; அமைச்சர் அமித்ஷா!

Filed under: அரசியல்,இந்தியா |

மத்திய அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் வீடியோ நாடாளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியானதில் சதியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறும்போது, “ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஜூலை 19ம் தேதி மணிப்பூர் இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ வெளியானது. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடந்த ஐந்து நாட்களாக அமளி செய்து வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்திற்கு முதல் நாள் இந்த வீடியோ வெளியாக வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் மோடி அரசின் மாண்பை குறைக்க சதி செய்யப்பட்டுள்ளது. மணிப்பூர் அமைதியை சிதைக்கும் வகையில் இந்த வீடியோக்கள் இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மணிப்பூர் பெண்கள் வீடியோ வீடியோ குறித்த விரிவான தகவல்களை பெரும் வகையில் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.