நாயால் உயிரிழந்த ஓட்டுனர்!

Filed under: தமிழகம் |

இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் குறுக்கே நாய் வந்ததால் தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

கோவில்பட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுனர், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற போது நாய் ஒன்று குறுக்கில் வந்ததால் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அவரை உடனே அருகில் உள்ளோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிழந்துள்ளார்.
நம் நாட்டில் வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், அவற்றை முறையாக வீட்டில் வைத்து வளர்ப்பவர்கள் இருந்தாலும் ஒரு சிலர் நாய்களை அவிழ்த்து விடுகின்றனர். இதனால், நாய்கள் எங்கு செல்கிறோம் என்பதே தெரியாமல், வீதியில் இருக்கும் குழந்தைகளையும், மக்களையும் அச்சுறுத்துவதுடன் அவர்களைக் கடிக்கவும் செய்கிறது. பைக்கில் செல்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாய் வளர்ப்பவர்கள் கவனத்துடன் இருந்தால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கலாம் அல்லவா.