நடிகர் தனுஷ் “பவர் பாண்டி” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தன்னை நிரூபித்தார். அடுத்து தனது 50வது படத்தை தானே இயக்கவ-ள்ளார். படத்தில் ஏகப்படட் நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
திரைப்படத்தில் தனுஷோடு எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. “கேப்டன் மில்லர்” திரைப்படம் முடிந்துள்ளதையடுத்து இந்த படத்தை தனுஷ் உடனடியாக தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பூஜை நாளை சென்னையில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு சென்ற தனுஷ், மொட்டையடித்துக் கொண்டார். அதே மொட்டைத் தலை கெட்டப்போடுதான் தோன்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.