நெல்லையில் ராகுல் காந்தி அறிவிப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

காங்கிரஸ் ராகுல்காந்தி எம்.பி. நெல்லையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில், “தமிழ்நாட்டில் உள்ள மீனவர் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனைக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது மோடி நிதிதர மறுத்துவிட்டார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி தர திட்டமிட்டுள்ளதாகவும் தகுதி பெற்ற ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்யப் போகிறோம். வறுமையில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும். அரசு வேலைகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீனவர்களை பிரதமர் மோடி முழுமையாக மறந்து விட்டார், ஆனால் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களின் படகுக்கு டீசல், காப்பீடு, கடன் அட்டை ஆகியவை வழங்கப்படும்” என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார்.