தக்காளியின் விலை தமிழகத்தில் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று ஒரு கிலோ தக்காளி சென்னை கோயம்பேட்டில் விலை ரூ.100க்கு விற்கப்பட்டது. மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில் நேற்று தக்காளி விலை 20வது நாளாக அதிகரித்தது.
அமைச்சர் ஐ.பெரியசாமி “வெளிச்சந்தைகளில் தக்காளில் விலை ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்படும் நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் ரு.85 வரை விற்பனை செய்யப்படும். நாளை முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கும்” என அறிவித்துள்ளார்.
Related posts:
கலாஷேத்ரா கல்லூரிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு..!
கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் - முதல்வர் இ.பி.எஸ் அறிவிப்பு!
இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்களோடு கூட்டணி வைக்கிறார்கள்: காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் ஆதங்கம்.
முன்னாள் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தனியார் மருத்துவமனையில் அனுமதி!