பத்ம விருதுடன் பேரணி நடத்த பிரேமலதா திட்டம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

சென்னை விமான நிலையத்திலிருந்து விஜயகாந்த் சமாதிக்கு கேப்டன் விஜயகாந்த்துக்கு அளிக்கப்பட்ட பத்ம விருதுடன் பிரேமலதா விஜயகாந்த் பேரணியாக செல்ல முயன்ற போது அவரை போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குடியரசு தலைவரிடம் விஜயகாந்த்துக்கான பத்மபூஷன் விருதை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார். அந்த விருதை விஜயகாந்த்துக்கு சமர்ப்பிக்கும் விதமாக சென்னை வந்தவுடன் சென்னை விமான நிலையத்திலிருந்து விஜயகாந்த் சமாதி வரை பேரணி நடத்த திட்டமிட்டார். ஆனால் அனுமதியின்றி பேரணி நடத்தக் கூடாது என போலீசார் தடுத்து நிறுத்தினர். இரண்டு வாகனங்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என போலீசார் கூறியதால் தேமுதிக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பத்ம விருதுடன் சென்னை திரும்பி இருக்கும் தன்னை போலீசார் இவ்வாறு தடுத்து நிறுத்தி இருக்க கூடாது என்று கூறிய பிரேமலதா நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு பிரேமலதா வாகனத்தை பின்தொடர்ந்து ஒரு சில வாகனங்களுக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.