பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

Filed under: தமிழகம் |

பவானி ஆற்றங்கரை தொடர் கன மழை காரணமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிக அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதை அடுத்து பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் இன்னும் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பவானி ஆற்றின் கரையோரம் குடியிருக்கும் பொது மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாறிக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. மேலும் பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 கன அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி 4 மதகுகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.