பாடகர் பம்பா பாகியா மறைவு!

Filed under: சினிமா |

பாடகர் பம்பா பாகியா இன்று காலை திடீரென மரணமடைந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இச்செய்தி திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

49 வயதான பம்பா பாகியா உடல்நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததார். இதையடுத்து திரையுலகினர் பலரும் சமூக வலைதளங்களில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” என்ற பாடலை பம்பா பாகியா ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பாடியுள்ளார். இந்நிலையில் மறைந்த பிரபல பாடகர் பம்பா பாகியா உடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.