‘பாபநாசம்’ திரைப்பட பாணியில் கொலையா?

Filed under: தமிழகம் |

வீடுகட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் மனித உடலின் பாகங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையில் வீட்டின் உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார். “பாபநாசம்” திரைப்பட பாணியில் கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோவை அருகே அன்னூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு துர்நாற்றம் வீசுவதை அடுத்து உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு என்ஜினியர் தகவல் கொடுத்தார். காவல்துறையினர் அங்கு வந்து பார்த்தபோது கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் மனித உடல் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மர்ம நபர்கள் சிலர் மனித உடலை தூக்கி எறிந்து விட்டு சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக புதைக்கப்பட்ட நபரின் உடல் யாருடையது என கண்டுபிடிக்க முயற்சி செய்ய உள்ளனர். கொத்தனார் பணி மேற்கொண்டு வந்த அசோக்குமார் என்பவர் 10 நாளாக காணவில்லை என்பதால் ஒருவேளை கொலை செய்யப்பட்டது அவராக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது