பார்த்திபனின் டுவிட்டர் டிரெண்டிங்!

Filed under: சினிமா |

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ரசிகரின் கோரிக்கையை ஏற்று டுவிட்டரில் பதிலளித்துள்ளது டிரெண்டாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. “பொன்னியில் செல்வன் -1” திரைப்பட டிக்கெட் முன்பதிவு விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் நடித்த படக்குழுவினரும் தொடர்ந்து புரமோஷன் செய்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் பார்த்திபன், சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் சரத்குமாருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். 3 ஐ கான் களும் ஒரே பிரேமில் என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு சமீபத்தில் ஒரு ரசிகர், “சார் சின்னதா ஒரு ஹாய் சொல்லுங்க” என கோரிக்கை விடுத்தார். அதன்பின் ஆங்கில எழுத்துகளில் ஹாய் என பதிவிட்டார் பார்த்திபன். அதன்பின் எடிட்டர் ஹரீஸ்- சேட்டை புடிச்ச ஆளு சார் என்ற தலைப்பிலான மீம் வைரலானது. இதுகுறித்து, இன்று, பார்த்திபன் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், மீன்ல விரால் நல்லது, மீம்ஸ் ஸ்வீக்ஷீணீறீ ஆவது நல்லது! (எடிட்டர் ஹரீஷ் அனுப்பியதால் வந்த தத்துவமிது) இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும் எனப் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது.