பாலியல் அத்துமீறலால் டாக்டருக்கு 20ஆண்டு சிறை!

Filed under: உலகம் |

அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க்கில் மருத்துவர் ஒருவர் 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.

அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஹேடன்(64) கடந்த 1980ம் ஆண்டிலிருந்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க் பிராஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் வேலை செய்து வந்தார். அக்காலக்கட்டங்களில் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களில் பலரை அவர் பலாத்காரம் செய்ததாக குற்றாச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கடந்த 2017ம் ஆண்டு பல பெண்கள், ராபர்ட் ஹேடனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறினர். இப்புகாரையடுத்து, அவர் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் 245 பெண்கள் அவர் மிது புகார் கூறினர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அனைத்து விசாரணைகளும் முடிந்து, 9 பெண்களிடம் சாட்சியம் பெறப்பட்டது. இதையடுத்து, மகப்பேறு மருத்துவர் ராபர்ட் ரிச்சர்ட் 20 ஆண்டு காலத்தில் நூற்றுக்கணக்ககான பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.